Showing posts with label பாடை-2. Show all posts
Showing posts with label பாடை-2. Show all posts

Friday, March 14, 2008

நான் யார்??

நான் இந்தியாவில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அகதி. என் பேர் தமிழன். இலங்கையில்... என் புலிகளை சிங்கள கறையான்கள் உயிரோட தின்றுகொண்டிருக்க...
என் இனம் இலங்கையில் அழிந்து கொண்டிருக்க... .

சிங்கள ராணுவ தலைவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து ஆதரவு தெருவிக்க ஒரு நாடு................ அது நான் பிறந்த தாய் நாடு. இது தாய் நாடா இல்லை தே.. நாடா என்று தமிழன் தான் சொல்லவேண்டும் . நான் வரி கட்டுவேன். என் பணத்தையே வைத்து என் இனத்தையே கொள்ள பணம் கொடுப்பான் என் நடுவண் அரசு .

சுப்ரீம் சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் தண்ணீர் விட மாட்டான் பக்கத்து ஊட்டுக்கரன் . கேட்டால் மேற்கு இந்தியாவில் இருந்து அம்பானி என்றொருவன் மினரல் விடுவான் வாங்கிக்கோ என்கிறான் .
நான் ஓட்டுபோட்ட தனமான தமிழனுக்கோ ..... அவன் ஆரம்பித்த தொலைக்காட்சியில் மார்பாட மயிராட.. நேரா நேரத்துக்கு ஒளிபரபகிறதா என்பதை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது .

என் மக்களோ மெகா தொடர் பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கும் கோழைகள்.

இனி ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தால் தான் தமிழனால் உழகில் உயிர் வாழ முடியும்!

தயவு செய்து இந்த தொகுப்பை யாரும் படித்தால் தயவு செய்து என் தன் மான தமிழனுக்கு காண்பித்து விடாதீர்கள்.....அவன் உடனே 'மத்தியமா' படிக்க பொய் விடுவான்.

நான் யார் என்று தெரியாதவன் கூட என்றாவது ஒரு நாள் தன்னை அடையாளம் கண்டுகொல்வான். சுயத்தை இழந்தவன் அழிந்தே போவான்!!